<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9920794</id><updated>2011-10-02T18:54:57.131+03:00</updated><title type='text'>அக்கினிக்குஞ்சு</title><subtitle type='html'>தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>15</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-117031420769196336</id><published>2007-02-01T10:14:00.000+03:00</published><updated>2007-02-01T10:16:47.743+03:00</updated><title type='text'>சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் விற்பனைக்கு</title><content type='html'>பிரபல குறுந்தகடு நிறுவனமான மொஸர்பேர் (moserbear) தமிழ்த் திரைப்படங்களின் VCD-க்கள் மற்றும் DVD-க்களை மிகக் குறைந்த விலையில் விற்பது உங்களில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்கும். என்னென்ன படங்கள் வெளியாகியிருக்கின்றன என்று அவர்களின் இணையத்தளத்தில் மேய்ந்த போது பல மொக்கை படங்களுக்கு இடையில் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உதிரிப்பூக்கள், நம்மவர்&lt;/span&gt;&lt;/strong&gt; போன்ற ரத்தினங்களும் ஒளிந்திருப்பது தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல திரைப்படங்களை சேகரிப்பவர்களுக்கு இந்த தகவல் உதவியாக இருக்குமோ என்றுதான் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.moserbaer.com/he_tamil_titles.asp"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;பட்டியலை காண&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-117031420769196336?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/117031420769196336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=117031420769196336' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/117031420769196336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/117031420769196336'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2007/02/blog-post.html' title='சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் விற்பனைக்கு'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-116867529913920582</id><published>2007-01-13T10:56:00.000+03:00</published><updated>2007-01-15T00:12:21.100+03:00</updated><title type='text'>குரு - ஒரு சூடான விமர்சனம்</title><content type='html'>&lt;span&gt;குரு - தமிழ் படத்தின் அசலான, பளிங்கு போன்ற அச்சின் குறுவட்டு நேற்று பார்க்க கிடைத்தது. அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img src="http://i132.photobucket.com/albums/q31/akkinikunchu/T0000055.jpg" border="0" alt="Photobucket - Video and Image Hosting" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;கமலுக்கு ராபின்ஹ¤ட் டைப் கதாபாத்திரம். பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவுவார். நாயகி ஸ்ரீதேவி முதலில் இவரை வெறுத்தாலும் பிறகு விரும்புவார். ஸ்ரீதேவியின் முறை மாப்பிள்ளையான மோகன்பாபு கமலிடம் அடிக்கடி மோதி மூக்குடைபடுவார். ஐ.வி.சசி இயக்கத்தில் 1980-ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் "ஆடுங்கள், பாடுங்கள்" "பேரைச் சொல்லவோ, அது நியாயமாகுமோ" "பறந்தாலும் விட மாட்டேன்" போன்ற இனிமையான பாடல்கள் இருக்கின்றன. கமல் தலைகீழாக தொங்கி தங்க மீனை திருடும் காட்சி திகில் கலந்த சுவாரசியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;மணிரத்னத்தின் சமீபத்திய பட விமர்சனத்தை எதிர்பார்த்து இங்கே வந்தவர்களுக்கு........ வேறென்ன SORRY. :-)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-116867529913920582?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/116867529913920582/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=116867529913920582' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/116867529913920582'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/116867529913920582'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2007/01/blog-post.html' title='குரு - ஒரு சூடான விமர்சனம்'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-116359311312002460</id><published>2006-11-15T15:17:00.000+03:00</published><updated>2007-02-02T22:55:27.580+03:00</updated><title type='text'>இளையராஜாவை வைத்து கும்மியடிப்பவர்களுக்கு</title><content type='html'>வரவர தமிழ்மணம் பக்கம் வரவே பயமாயிருக்கிறது. வெட்டு, குத்து சத்தங்களும், அய்யோ அம்மா என்று அலறும் சத்தங்களும் தூரத்திலேயே ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது. ஒரு பக்கம் நாகரீக கனவான்களின் வக்கீல் நோட்டீஸ்கள் வேறு. (வலைப்பதிவு சர்ச்சைகளைக் கவனிக்கவே ஒரு வழக்கறிஞர் முன்வந்தால் சீக்கிரம் பணக்காரராகி விடுவார் என்று தோன்றுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;அப்சலை தூக்கிலிட்டு அல்லது மறுத்து களைத்தவர்கள் இப்போது இளையராஜா சர்ச்சையில் இறங்கியிருக்கிறார்கள். இதில் ரோசாவின் பதிவை மாத்திரமே முழுமையாக படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது  குறித்து சில அவசர வார்த்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜா தம்முடைய கருத்தாக வெளியிட்டதற்கு மற்றவர்கள் உள்ளே புகுந்து இவ்வளவு ஊடாட வேண்டியதில்லை என்று நான் நம்புகிறேன். இருந்தாலும் ரோசா வசந்த்தின்  பதிவை படித்ததில் எனக்குத் தோன்றியது:&lt;br /&gt;தேவர் மகன் திரைப்படம் என்பது புனைவு. அந்தப் புனைவின் படி ஒரு ஊர்த்தலைவரை ஊர்மக்கள் அவர் சாதியுடன் பொருத்தி புகழ்ந்து பாடுவது போன்ற சூழ்நிலை. இதற்கு இசையமைத்ததற்காக சம்பந்தப்பட்ட இசைக்கலைஞரை குற்றஞ்சாட்ட தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் பெரியார் திரைப்படம் என்பது அப்படி அல்ல. புகழ்பெற்ற ஒரு ஆளுமையின் வாழ்க்கையைப் பற்றின வாழ்க்கை வரலாறு என்று வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஒரு படைப்பில் பங்கு பெறுவதன் மூலம் அதில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களுக்கு தாமும் பொறுப்பாகி விடுவோம் என்கிற அற உணர்வினால் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்க மறுத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(அவரின் பதிவில் பின்னூட்டமிட முடியாததால் இங்கே இடுகிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர்களுக்கே உண்டான சுதந்திரத்தை ராஜா எடுத்துக் கொண்டிருக்கிறார். இதை ஏன் ஜாதீய அமைப்பிற்குள்ளும் கொள்கைச் சட்டகங்களுக்கும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறார்களோ, தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-116359311312002460?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/116359311312002460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=116359311312002460' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/116359311312002460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/116359311312002460'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2006/11/blog-post.html' title='இளையராஜாவை வைத்து கும்மியடிப்பவர்களுக்கு'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-115815078483553340</id><published>2006-09-13T15:30:00.000+03:00</published><updated>2006-12-08T13:50:06.123+03:00</updated><title type='text'>வலைப்பதிவர் கூட்டங்கள் பற்றி .....</title><content type='html'>சக வலைப்பதிவர்கள் சந்தித்து உரையாடின விவரங்களைப் பற்றின விவரங்களை ஆரம்பம் முதலே கவனித்து வருவதில் அதிலிருந்து என்னால் கீழ்கண்ட அம்சங்களை கவனிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(1)  வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் சென்னை வரும் போது,  காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்களின் சென்னை வருகை போல தமது "கோஷ்டிகளுக்கு" மாத்திரம் தகவல் தந்து சந்தித்து உரையாடி, பின்னர் அதை தமது வலைப்பதிவில் பதிவது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது "அண்ணன் ஆற்காட்டார் வருகிறார்" ரேஞ்சிற்கு பொது அறிவிப்பு செய்துவிட்டு அலைகடலென வருவார்கள் என்று எண்ணி ஏமாந்து வருகிற ஏழெட்டு பேருடன் கட்டாய திருப்தியடைந்து கலைந்து செல்வது.&lt;br /&gt;&lt;br /&gt;(2) அவ்வாறு சந்தித்த விவரங்களிலும் உருப்படியில்லாத பின்வரும் செய்திகள் மாத்திரம்தான் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt; அ) யார், யார் எத்தனை மணிக்கு வந்தார்கள்? &lt;br /&gt;ஆ) வந்தவர்கள் எந்தெந்த வாகனங்களில் வந்தார்கள்?&lt;br /&gt;இ) என்னென்ன உணவு வகைகள் சாப்பிடப்பட்டன? போண்டாவிற்கு பின் தோசையா?     அல்லது காப்பியா? பில் தொகையை யார் கொடுத்தது அல்லது எப்படி பங்கிடப்பட்டது?&lt;br /&gt;ஈ)  யார் யாரை கிண்டலடித்துக் கொண்டார்கள் போன்ற விவரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையம் மூலம் மாத்திரம் அளவளாவிக் கொண்டிருந்தவர்கள் நேரில் சந்திக்கும் போது ஏற்படும் பரவசத்தையும்  சந்தோஷத்தையும் பங்கிட்டுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்த அம்சம் மாத்திரமே வலைப்பதிவர் கூட்டத்தில் (உள்ளூர் பதிவர்கள் கூடினாலும்) இருப்பது நேரத்தை வீணடிக்கும் செயலாக எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி கூட்டங்களை ஆக்கப்பூர்வமாக மாற்றியமைக்க எனக்குத் தோன்றிய சில யோசனைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1) Venue எனப்படும் கூட்டம் நடக்குமிடத்தை புதுமையான சூழலாக, மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது. உட்லண்ட்ஸ் டிரைவ் இன்-ல் நிறைய சந்திப்புகள் ஆகிவிட்டது. சென்னையில் இடமா இல்லை? காந்தி சிலை, பெசனட் நகர் பீச், பாரதியார் நினைவு இல்லம், கன்னிமரா நூலகம் என்று சந்திப்பு இடங்களை மாற்றிக் கொண்டால் கலந்து கொள்கிறவர்களுக்கும் உற்சாகமாக இருக்கும். அது மாத்திரமில்லாமல் விருப்பமுள்ளவர்கள், அந்த இடங்களுக்கு இதுவரை போகாதவர்கள், நூலகத்திற்கோ, நினைவு இல்லத்திற்கோ செல்லுகிற வாய்ப்பையும் இது ஏற்படுத்திக் கொடுக்கும். சென்னையில் இருக்கும் எத்தனை பேர் பாரதியாரின் நினைவு இல்லத்திற்கு சென்றிருப்பார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;......அல்லது கிழக்குப் பதிப்பகம் போன்ற பதிப்பக நிறுவனங்களே இதற்கான வசதிகளை அவர்களின் வளாகத்தில் (Book Point போல) ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதன் மூலம் ஏற்படும் நூல் விற்பனையோடு, வாசிக்கும் பழக்கமும் இன்னும் பரவலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;2) இம்மாதிரியான கூட்டங்களை ஒரு (மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை போல்) குறிப்பிட்ட நாளில் தொடர்ந்து அமைத்து ஒரு ஒழுங்கை ஏற்படுத்தலாம். (பழைய) கணையாழி கூட்டங்கள், இலக்கியச் சிந்தனை கூட்டங்கள் இவ்வாறுதான் நடைபெற்றன. குறிப்பிட்ட நாளில் கலந்து கொள்ளும் ஒழுங்கை ஏற்படுத்துவதோடு, கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக நேரத்தை ஒதுக்கி வைக்கவும் இந்த முறை பயன்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;3) வெறுமனே சந்தித்துப் பேசி பிரிவதை விட ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் அன்றைய உரையாடலை நிர்ணயித்துக் கொள்ளலாம். பெண்களுக்கான இடஒதுக்கீடு பாராளுமன்றத்தில் இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படாதது முதல் விநாயகர் பால் குடித்தது மூடநம்பிக்கையா அல்லவா என்கிற விஷயம் வரை சர்ச்சைக்குரிய விவாதங்களுக்கு உட்படுகிற விஷயங்களைப் பற்றி உரையாடலாம். இதில் கலந்து கொள்வதின் மூலம் பார்வையாளர்களுக்கு பல விஷயங்களை அறிய முடிவதுடன் தாமும் பேச வேண்டும் என்கிற உந்துதலில் இன்னமும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையும் ஏற்படும். மூத்த வலைப்பதிவர்கள் இந்த மாதியான கூட்டங்களை வழிநடத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;4) வீணான பேச்சுக்களை தவிர்ப்பது. சில கூட்டங்களில் ஒரு மூத்த வலைப்பதிவாளர்,  (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) விரும்பத்தகாத முறையில் பின்னூட்டமிட்டு நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தினவரைப் பற்றியே அதிகம் பேசி மற்றவர்களை எரிச்சலூட்டினார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்தன. இதனாலேயே இவர் கலந்து கொள்ளும் கூட்டங்களை சிலர் தவிர்க்க முயல்வதாகவும் தெரிய வருகிறது. இம்மாதிரியானவர்கள் தங்களின் போக்கை மாற்றி ஆக்கப்பூர்வமான விஷயங்களை உரையாடுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;5) குழுவாக மாத்திரம் உரையாடிப் பிரியாமல் ஒவ்வொருவரைப் பற்றிய (பொதுவான) தனிப்பட்ட விவரங்களையும், அவர்களின் விருப்பு, வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளலாம். அதையும் தாண்டி தொழில் ரீதியான தகவல்களையும் அறிந்து, சம்பந்தப்பட்ட துறையின் உதவியை விரும்புவோர்களுக்கு உதவவும் முன்வரலாம். நட்பையும் தொழிலையும் குழப்ப வேண்டுமா என்று எண்ணக்கூடும். தவறில்லை. நமது உறவினரால் அறிமுகப்படுத்தப்பட்டால் எப்படி அதை உபயோகித்துக் கொள்வோமோ அப்படி இதை எண்ணலாம். (பொருளாதார ரீதியில் ஜாக்கிரதையாக இதை அணுகுவது நல்லது)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் அதிகமிருப்பதும் அதிகம் விரயமாவதும் ஒன்றேதான். அது மனிதசக்தி. லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்கள் இவ்வாறான அபரிதமான மனிதசக்தியை வீணடிப்பது கண்கூடு. ஒவ்வொருவரும் தனித்தனி தீவாகிப் போன இன்றைய நாகரிகத்தில் மனிதர்கள் ஆக்கப்பூர்வமான விஷயத்திற்காக ஒன்றாக கூடுவது அரிதான விஷயம். எனவேதான் இம்மாதிரியாக கூட்டப்படும் வலைப்பதிவர்களின் சந்திப்பையும் மாற்றியமைக்கலாம் என்று என்னுள் தோன்றிய ஆதங்கத்தினால்தான் இந்தப் பதிவு. யாரையும் அல்லது எதையும் விமர்சிக்க அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களும் தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-115815078483553340?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/115815078483553340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=115815078483553340' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/115815078483553340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/115815078483553340'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2006/09/blog-post_13.html' title='வலைப்பதிவர் கூட்டங்கள் பற்றி .....'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-115797842198532025</id><published>2006-09-11T15:33:00.000+03:00</published><updated>2006-09-11T15:58:05.470+03:00</updated><title type='text'>எங்கிருந்தாலும் வாழ்க!</title><content type='html'>&lt;a href="http://smg.photobucket.com/albums/v621/suresh/?action=view&amp;current=jyotika1.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket - Video and Image Hosting" src="http://img.photobucket.com/albums/v621/suresh/jyotika1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பூவெல்லாம் கேட்டுப்பாரில்" அறிமுகமான இந்தப் பூ முதல் படத்திலிருந்தே என் கவனத்தைக் கவர்ந்தது. வாலி, குஷி, பூவெல்லாம் உன் வாசம் ..... சில்லென்று ஒரு திரைப் பட்டியல் தந்த ஜோ இன்று திருமணம் செய்து கொண்டு அவர்களின் தீவிர ரசிகர்களை சூன்யத்தை வெறிக்க வைத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;க்வார்ட்டரும் குப்புறப் படுத்தலுமாய்தான் இனி கழியப்போகிறது வாழ்க்கை. :-(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-115797842198532025?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/115797842198532025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=115797842198532025' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/115797842198532025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/115797842198532025'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2006/09/blog-post.html' title='எங்கிருந்தாலும் வாழ்க!'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-112382578804219842</id><published>2005-08-12T08:47:00.000+03:00</published><updated>2006-10-11T12:23:21.350+03:00</updated><title type='text'>70 வயது மேலானவர்களுக்கு மட்டுமே பதில்: சுஜாதா</title><content type='html'>ழான் பால் ஸார்ட் பற்றியும் அவரது தத்துவமான இருத்தலியல் பற்றியும் கடந்த வார ஆனந்த விகடன் பக்கங்களில் சுஜாதா எழுதியிருந்த அடிப்படைத் தவறை சுட்டிக் காட்டி ரவிஸ்ரீனிவாசும் வெங்கட்டும் அவர்களது வலைப்பக்கங்களில் குறிப்பிட்டு இருந்தார்கள். இதில் ரவி, தனது பதிலை ஆனந்த விகடனுக்கே மின்னஞ்சல் செய்திருந்ததாக அவரது வலைப்பதிவில் தெரிவித்திருந்தார். இது குறித்து சுஜாதா என்ன பதில் தரப்போகிறார்  என்று (அல்லது தராமலே கூட இருக்கலாம் என்றும்) எதிர்பார்த்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார ஆ.வியில் இதுகுறித்து அவரின் எதிர்வினை பதிவாகியிருக்கிறது.  இதில் நகைச்சுவையான பகுதி என்னவென்றால்,  வலைப்பதிவுகளில் இதைப்பற்றி சர்ச்சை ஒடிக்கொண்டிருப்பதை தேசிகன் புண்ணியத்தில் அறிந்திருக்கிற சுஜாதா, இதைப் பற்றிக் கேள்வி எழுப்பிய 77 வயதான பேராசிரியருக்கு மட்டும் அவரது வயதுக்கு மதிப்பளித்து பதிலளிப்பதாக சுஜாதா குறிப்பிட்டு இருக்கிறார். கேள்வி கேட்கிற எல்லோருக்கும் பதிலளிக்க முடியாத அளவிற்கு நேரப்பிரச்சினையை புரிந்து கொண்டாலும் இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சுஜாதாவிடம் விவாதம் செய்வதற்கு குறைந்தது 70 வயதாவது கடந்திருக்க வேண்டும் என்பது இதன் பொருளா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் மற்றவர்களுக்கெல்லாம் என்ன சொல்ல வருகிறார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"போங்கடா சின்னப்பசங்களா"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-112382578804219842?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/112382578804219842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=112382578804219842' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/112382578804219842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/112382578804219842'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2005/08/70.html' title='70 வயது மேலானவர்களுக்கு மட்டுமே பதில்: சுஜாதா'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-111641634520099292</id><published>2005-05-18T14:36:00.000+03:00</published><updated>2005-05-18T14:39:05.206+03:00</updated><title type='text'>உங்கள் வலைப்பதிவில் அதிக பின்னூட்டங்கள் வேண்டுமா?</title><content type='html'>நண்பர்களே நலம்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நடிகை மும்தாஜின் இடுப்பளவு போல் வலைப்பதிவுகள் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், விநாடிக்கு விநாடி பெருத்துக் கொண்டே போவதால், இணையத்து வாசகனுக்கு எதைப் படிப்பது? எதை மிதிப்பது? என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. சில வலைப்பதிவுகளின் பின்னூட்டங்கள் மூன்று இலக்கத்தையும் தாண்டி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்க சில வலைப்பதிவுகளின் பின்னூட்ட எண்ணிக்கைகள் நோஞ்சான் போல பரிதாபமாக நின்று சில மணித்துளிகளுக்குள் காணாமற் போய்விடுகின்றன.இன்னும் சில வலைப்பதிவுகள் நான் கணக்குப் பரீட்சையில் வாங்கிய மார்க்கையே பிடிவாதமாக வாங்கிக் கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே அந்த மாதிரியான வலைப்பதிவர்களின் துயர் துடைக்கவும், அவர்களின் வலைப்பதிவுகளிலும் பின்னூட்டங்கள் பொங்கி வழிய இலவசமாக நீங்கள் கேட்காமலேயே சில யோசனைகள் இங்கே கொடுக்கப்படுகின்றன. இலவசம் என்றதும், இந்திய அரசு சமீபத்தில் வழங்கிய குறுந்தகடு போல் வேலைக்கு ஆகாமல் போய் விடுமோ என்று பயப்பட வேண்டாம். இந்த யோசனைகளைப் பின்பற்றினால் நிச்சயம் வெற்றிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவின் தலைப்பு மிக முக்கியம். நீங்கள் பத்திரிகைகள் விற்கும் கடை வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் பத்திரிகைத் துண்டின் தலைப்புச் செய்திகளை கவனித்தால் 'நடிகை விபசார வழக்கில் கைது' என்று தலைப்பிட்டு இருக்கும். பத்தாவது ரிசல்ட் வந்த போது கூட தூங்கி எழுந்து நிதானமாக பேப்பர் வாங்க வந்த நீங்கள் (ரிசல்ட் தெரிஞ்சதுதானே?) அரக்கப் பரக்க பத்திரிகையை வாங்கி தலை போகிற வேலையாக முதலில் அந்த செய்தியை படிப்பீர்கள். ஆனால் அந்தச் செய்தி நீங்கள் எதிர்பார்த்தபடியில்லாமல் உங்கள் அபிமான நடிகைகளையெல்லாம் ஒரம் கட்டி விட்டு தெலுங்கிலோ, மலையாளத்திலோ நடிக்கும் ஒரு தங்கை வேஷ நடிகையைப் பற்றியதாக இருக்கும். உங்களுக்கு 'சீ' யென்று ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே வாசகனை கவர்ந்திழுக்க தலைப்பு மிக முக்கியம். சில உதாரணங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'நான் பார்ப்பனவாதியல்லாத தலித்வாதி'&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நீங்கள் எந்த ஜாதியென்பதை ஜாக்கிரதையாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஏதாவது ஒரு ஜாதிக்காரர்களைப் பற்றி கண்ட மாதிரி எழுதவும். இதனால் 'ஜாதிகள்ல எனக்கு நம்பிக்கை கிடையாதுப்பா' என்று வெளியே சொல்லிக் கொண்டிருக்கும் படித்த பிதாமகன்கள், இந்த தலைப்பால் இயல்பாக ஆவேசப்பட்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஓடிவருவார்கள். அப்புறமென்ன, அவர்கள் ஒன்று எழுத, நீங்கள் ஒன்று எழுத (அதாவது மாற்றி மாற்றி திட்டிக் கொள்வதை சொல்கிறேன்) பின்னூட்ட மழைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது ஒரு பிரபலத்தை கண்ட மேனிக்கு திட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'ரஜினிகாந்த் ஒரு பொறம்போக்கு' அல்லது 'பிரபாகரன் ஒரு போராளி அல்ல, பெருச்சாளி'&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;உள்ளே ஆதாரப் பூர்வமான விஷயமொன்றும் இருக்க வேண்டுமென்பதில்லை. படிக்கும் போது சரித்திரப் பாடத்தில் ஜல்லியடித்திருப்பீர்களே, அதைப் போல் ஏதாவது ஜல்லியடித்து விட்டு கூடவே தலைப்பை நியாயப் படுத்துகிறாற் போல் சம்பந்தப் பட்டவரை பச்சையாக (அல்லது உங்களுக்குப் பிடித்த நிறத்தில்) திட்டவும். சம்பந்தப்பட்ட நபரை உங்களுக்குப் பிடித்தமானவராக கூட இருக்கலாம். ஆனால் பின்னூட்டம் என்கிற முக்கிய இலக்கை நாம் குறி வைத்திருக்கும் போது, இம்மாதிரியான அபிமானங்களை தியாகம் செய்துவிடத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சகட்டு மேனிக்கு எல்லார் வலைப்பதிவிலும் (உள்ளடக்கம் என்ன இருக்கிறதையெல்லாம் படித்து நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காதீர்கள்) சூப்பர்..... தல சூப்பர்....  நல்ல பதிவு....   ஜமாய்ச்சுட்டீங்க .... என்று ஒன்லைனரில் கமெண்ட் போட்டு விட்டு வரலாம். இதனால் எனக்கென்ன பயன் என்று அப்பாவியாக கேட்காதீர்கள். இது ஒரு முதலீடு மாதிரி. இதனால் கவரப்பட்ட சம்பந்தப்பட்ட மகாஜனங்கள், அடடா! நான் எழுதியிருக்கறதை மதிச்சு ஒருத்தன் பாராட்டியிருக்கறானே... என்று உங்கள் வலைப்பதிவில் வந்து உங்கள் பதிவை பதிலுக்கு பாராட்டுவார். விருந்தோம்பல் என்பது தமிழனின் ஆதார நாகரிகமன்றோ? (நம்ம கல்யாணத்துக்கு மொய் எழுதினவனுக்கு அவன் வீட்டு கல்யாணத்தப்போ எவ்வளவு எழுதினான்னு கரெக்டா அதே அளவு மொய் எழுதறவங்கதானப்பா நாம....)&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுக்குன்னு சில முக்கிய பதிவர்கள் (முக்காத பதிவர்கள் கூட) இருக்காங்க. முக்கியமா அவங்க பதிவுக்கு போய் அவங்க காது கிழியறா மாதிரி ஜங்....ஜங்குன்னு ஜால்ரா அடிச்சுட்டு வரணும். சுத்தி சுத்தி இவங்க பதிவுக்கு மட்டும்தான் போகணும். மத்த பதிவுல என்ன முக்கியமான விஷயமா இருந்தாலும் படிக்கலாமே தவிர, தப்பித்தவறி கூட நம்ம தலய காட்டிடடக்கூடாது. இல்லாட்டி உங்க இமேஜ் போயிடும். நீங்க பின்னூட்டமிடாத வலைப்பதிவாளர்களும் உங்களை முக்கியமான ஆளென்று சரியான முறையில் தவறாக யூகித்து நீங்கள் அவர் வலைப்பதிவில் எப்படியாவது பின்னூட்டமிடுவதற்காக உங்கள் கவனத்தை கவர்வதற்காக தொடர்ந்து உங்கள் வலைப்பதிவிலோ, அல்லது நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களைப் பாராட்டி பின்னூட்டமிட்டுக் கொண்டே வருவார். இதனால் உங்கள் வலைப்பதிவில் மட்டுமல்லாது மற்றவர்களின் வலைப்பதிவுகளிலும் உங்களைப் பற்றிய பின்னூட்டங்களே அதிகமிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பல யோசனைகள் கைவசம் உள்ளன. நேரமிருக்கும் போது எடுத்து விடுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-111641634520099292?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/111641634520099292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=111641634520099292' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/111641634520099292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/111641634520099292'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2005/05/blog-post.html' title='உங்கள் வலைப்பதிவில் அதிக பின்னூட்டங்கள் வேண்டுமா?'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-110976732081820092</id><published>2005-03-02T15:40:00.000+03:00</published><updated>2005-03-02T15:42:00.820+03:00</updated><title type='text'>பெண்களுக்கென சிறப்பிதழ் தேவைதானா?</title><content type='html'>நீண்ட நாட்களுக்குப் பிறகு அக்கினிக்குஞ்சு உயிர்த்தெழுந்திருப்பதில் மகிழ்வீர்கள் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் 2005 திசைகள் இதழ் முழுழுழுழுழுழுழுழுழுழுழுவதையும் (?!) மாலன் பெண்களுக்கென ஒதுக்கி வெளிக்கொண்ர்ந்திருக்கிறார். இது குறித்து எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணாதிக்க சமூகத்திலிருந்து மெல்ல தன்னை மீட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் சமூகம்,  அரசியல் தளங்களில் 33 சதவீத விழுக்காட்டை போரடியும் பெறமுடியாத இன்றைய நிலையில்,  பெண் படைப்பாளிகளுக்காக தனது மார்ச் 2005 இதழின் 100 சதவீதத்தையும் அளித்த மாலனைப் பாராட்டும் அதே வேளையில் ஓடுகிற பேருந்தில் மற்றவர்களின் அனுதாபத்தை விரும்பாமல் மற்றவர்களுக்கு சமதையாக தானும் நிற்க விரும்பும் ஊனமுற்ற ஒரு நபரை கட்டாயப்படுத்தி அழைத்து தன் இருக்கையில் அமரச் செய்து அதன் மூலம் அவர் ஊனமுற்றவர் என்பதை சுற்றியிருக்கிறவர்களுக்கு மீண்டுமொரு முறை நிரூபித்து அவரை வெட்கித் தலைகுனியச் செய்கிற அதே முறையற்ற செயலை பெண் படைப்பாளிகளுக்கென தனியிடம் ஒதுக்கி செய்திருப்பதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண், பெண் என்கிற பாலின வேறுபாடுகளின் இடைவெளி குறைந்து போய், இருபாலரும் எல்லாத் தளங்களிலும் இணையாக வெற்றி வாகை சூடிவரும் இந்த கால கட்டத்தில் பெண்களுக்கென தனி இடமளித்து அவர்களை ஏதோ தாழத்தப்பட்டவர்களுக்கென தரப்படும் சலுகைகள் தருவது  மாதிரி நடத்துவதை இனியாவது நிறுத்த வேண்டும். பெண்களும் இந்த மாதிரி சலுகைகளை விரும்பமாட்டார்கள் என்றே நம்புகிறேன். எல்லாத்தரப்பினருடன் போட்டியிட்டு தன் தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ளும் போக்கைத்தான் அவர்கள் விரும்புவார்கள் என்றும் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக மயமாக்கலின் விளைவாக வணிக அமைப்புகள் தங்கள் வியாபார யுக்தியாக 'காதலர் தினம்' 'அன்னையர் தினம்' என்று உணர்வுபூர்வமான விஷயங்களை தங்கள் லாபநோக்கிற்காக பயன்படுத்திக் கொள்வதைப் போல, வெகுஜன பத்திரிகைகளும் பெண்கள் சிறப்பிதழ் என்று கொண்டுவந்து அதே திசையில் பயணிக்கின்றன. வணிக நோக்கில்லாமல் செயல்படும் 'திசைகளும்' இதே திசையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;மாறாக ஆதவன் குறித்தான சிறப்பிதழ் போல இன்றைய இளம் வாசகர்கள் அறியாத, விமர்சகர்களால் ஒதுக்கப்பட்ட சிறந்த எழுத்தாளர்களைப் பற்றின சிறப்பிதழ்களை கொண்டுவரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து உங்களின் முக்கியமாக பெண் படைப்பாளிகளின் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-110976732081820092?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/110976732081820092/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=110976732081820092' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110976732081820092'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110976732081820092'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2005/03/blog-post.html' title='பெண்களுக்கென சிறப்பிதழ் தேவைதானா?'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-110493459585897464</id><published>2005-01-05T17:15:00.000+03:00</published><updated>2005-01-05T17:16:35.856+03:00</updated><title type='text'>வெங்கடேஷீம் சுனாமியும்</title><content type='html'>நண்பர் வெங்கடேஷ், சமீபத்திய இயற்கை சீற்றத்தில் சிக்கி அதிலிருந்து தப்பிய அனுபவத்தை ஒரு எழுத்தாளருக்கே உரிய லாவகத்தோடு (எழுத்தாளர் என்னும் போது அதை சுவாரசியாக சொல்கிற பழக்கத்தை தவிர்க்கவியலாது) தம்முடைய வலைப்பதிவில் பரபரப்பாக எழுதியிருந்தார். அவர் எதிர்பாராமல் செய்த தவறு 'சுனாமிக்கு நன்றி கூறியதுதான்'.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான். நம் இணையத் தோழர்களான, சிம்புவின் ஆண்குறியை அறுக்குமாறு அறைகூவல் விட்ட ரோசா வசந்தில் இருந்து சமீபத்தில் வாந்தி எடுக்கத் தொடங்கியிருக்கிற நம்பி வரை அவர்மீது பாய்ந்து பிடுங்கிவிட்டார்கள். நம்மாட்களின் பாசாங்குத்தனமான அசட்டு சென்டிமென்டுகளை பாவம் அவர் அறிந்திருக்கவில்லையோ, என்னமோ.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு அனுபவங்களில் இருந்தும் நாம் சில பாடங்களை கற்றுக் கொள்கிறோம். அது இன்பமயமாகவோ அல்லது துன்பமயமாகவோ இருக்கலாம். அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் அல்லது கற்றுக் கொண்டோம் என்பதே சான்றோர்களின் பார்வையாக இருக்கும். வெங்கடேஷின் பதிவை ஒரு தனிப்பட்ட ஒருவரின பார்வையாக,  அந்த அனுபவத்தின் மூலம் அவர் என்ன பெற்றார் என்பதை சொல்கிறார் என்று பார்க்கவேண்டுமே ஒழிய, ஏதோ சுனாமியையே அவர்தான் முன்நின்று நடத்தி வைத்தார் என்கிற மாதிரி பழிசொல்வது அநியாயமான செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமியில் இறந்தவர்களுக்காக மனமார அனுதாபம் செலுத்தும் நாம்,  அதிலிருந்து தப்பித்து வந்திருக்கும் ஒருவர் தம் அனுபவத்தை கூற முனையும் போது அவருக்காக நாம் அனுதாபப்பட்டிருக்க வேண்டாமா? மாறாக ஏனய்யா சுனாமிக்கு நன்றி சொன்னாய் என்று அவர் மீது பாய்ந்திருப்பது என்ன மாதிரியான அராஜகத்தனம்? கருத்து சுதந்திரம் என்கிற விஷயத்தை நாம் மதிக்கிறோமா இல்லையா? அப்படியே நம் விமர்சனங்களை வைக்கும் பட்சத்தில் (இந்த இக்கட்டான சூழ்நிலையை விமர்சிப்பதே தவறு என்ற போதிலும் கூட) அதில் குறைந்தபட்ச நாகரித்தையாவது நாம் கடைப்பிடித்திருக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;'ஓடி ஒளிந்து கொண்டாய், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தாய்?' என்று கும்பலாக ஓடிவந்து குற்றப்பத்திரிக்கை வாசித்திருக்கும் நண்பர்கள் அவர் அடுத்தடுத்த பதிவில்,  இந்த இயற்கை சீற்றத்தின் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் காணாமற் போனவர்களைப் பற்றின விவரங்களை இணையம் மூலம் தொகுக்கலாம் என்று ஒரு ஆக்கப்பூர்வமான யோசனையை முன்வைத்த போது,  அவரை திட்டித் தீர்த்த நண்பர்கள் ஒரு சிறிய பாராட்டை போலியாகவாவது அளித்திருக்கலாம் அல்லவா? 'சுனாமிக்கு நன்றி' பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் பத்தில் ஒரு பகுதி கூட இந்தப் பதிவிற்கு வரவில்லை என்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம்.ஒருவரை தவறாக விமர்சிக்க மட்டும் நடுராத்திரி அலாரம் வைத்து எழுந்துகொள்ளும் நாம் பாராட்டுகிற விஷயத்தில் மட்டும் ஏன் பின்வாங்குகிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;அவரை கோழை என்று விமர்சிக்கும் இந்த செயலும் ஒருவகையான கோழைத்தனம்தானே?&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-110493459585897464?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/110493459585897464/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=110493459585897464' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110493459585897464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110493459585897464'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2005/01/blog-post_110493459585897464.html' title='வெங்கடேஷீம் சுனாமியும்'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-110493317385071799</id><published>2005-01-05T16:50:00.000+03:00</published><updated>2005-01-05T16:52:53.850+03:00</updated><title type='text'>நான் வலைப்பதிவு ஆரம்பித்ததின் நோக்கம்</title><content type='html'>நான் இந்த வலைப்பதிவு ஆரம்பித்த நோக்கத்தை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருக்கிறேன். சக இணைய நண்பர்களோடு எனக்கு உள்ள மாற்றுக்கருத்தை ஆக்கப்பூர்வமான முறையில் வெளிப்படுத்துவதே என் முக்கிய நோக்கம். இதனை ஒருசிலர் தவறான முறையில் எடுத்துக் கொள்ளலாம் என்பதால்தான் ஒரு புனைப்பெயரை பயன்படுத்த வேண்டியதாயிற்று. அவசியமான நேரத்தில் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் நான் தயங்க மாட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதுநாள் வந்த பதிவுகளை படித்த நண்பர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவோ, அவர்களை களங்கப்படுத்த முயலவோ, ஆபாசமாக எழுதவோ முனையவில்லை. அது என் நோக்கமுமல்ல. எல்லா மனிதர்களும் நிறையும் குறையும் உள்ளவர்களே. வழக்கமாக நிறைகளை சற்று அதிகமாகவே வெளிப்படுத்தும் அவர்களுடைய நண்பர்கள் குறைகளை சில காரணங்களுக்காக வெளிப்படுத்த தயங்குவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காரணங்கள் கீழ்க்கண்டவாறு இருக்கலாம்:&lt;br /&gt;&lt;br /&gt;1) நண்பர் தம்மை தவறாக நினைத்து நட்பை முறித்துக் கொள்வாரோ என்று (என்னைப் போல்)&lt;br /&gt;&lt;br /&gt;2) அவரால் ஏதாவது காரியம் ஆக வேண்டியிருந்து,  அவரை விமர்சிப்பதின் மூலம் அது பாழ்பட்டுவிடுமோ என்கிற தயக்கம் காரணமாக&lt;br /&gt;&lt;br /&gt;3) குறைகளை வெளிப்படுத்திய பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர், காட்டமாக தம்மை விமர்சித்தால் அதை எதிர்கொள்ள இயலுமா என்கிற தயக்கம் காரணமாக&lt;br /&gt;&lt;br /&gt;4) இதுநாள் தம்மை விமர்சிக்காத நண்பர், இது காரணமாக தம்மையும் விமர்சிக்கத் தொடங்கிவிடுவாரோ என்கிற காரணங்களுக்காக&lt;br /&gt;&lt;br /&gt;இன்னபிற.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மையான நட்புணர்ச்சி இந்த மாதிரியான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களால் பாதிக்கப்படாது என்றே நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாளர்கள். பத்ரி, பா.ராகவன், இரா.முருகன் ஆகியோர்களை நான் சில பல காரணங்களுக்காக விமர்சித்தது கூட அவர்களிடம் உள்ள சிறு குறைகளை சுட்டிக் காட்டவும்,  அவர்கள் மீது வேறெங்கோ எழுந்துள்ள விமர்சனங்களை சுட்டிக் காட்டி என்னை தெளிவுபடுத்திக் கொள்ளவும்தான். சற்று ஆழ யோசித்தால் நான் செய்வது தவறான காரியமில்லை என்பதை நண்பர்கள் உணரக்கூடும். உள்ளேயே வைத்து புழுங்கிக் கொள்வதை விட சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக தம் விமர்சனங்களை வைப்பதில் தவறே இருக்க முடியாது என்றே தீவிரமாக நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த வலைப்பதிவிற்கு வரும் சில பின்னூட்டங்களைப் பார்க்கும் போது நான் இதை ஆரம்பித்த நோக்கம் புரிந்துகொள்ளப்படாமல் பிறழ்ந்து போகுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. (நண்பர் பெயரிலி,  நான் web-counter எண்ணிக்கையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோனோ என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பியிருக்கிறார்)அதனாலேயே இந்த வலைப்பதிவை இத்தோடு மூடிவிடலாமா என்று எண்ணத் தோன்றுகிறது. தவறான புரிதல்கள் என் நோக்கத்தை நீர்த்து போகச் செய்துவிடுமோ என்றும் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டங்களின் எதிர்கொள்ள இயலாத அச்சத்தினால் அல்ல. நிச்சயமாக அல்ல. இயல்பிலேயே போராட்ட குணமுடைய நான் அலுவலகத்தில் எதிர்கொள்கிற பிரச்சினைகளை விட இது பெரிதல்ல. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட செயல் புரிந்துகொள்ளப்படாமல் போகும் போதும், அதனால் சிலர் (நான் விரும்பாமலேயே) காயப்படுகிறார்கள் எனும் போதும் தம் செயலை நிறுத்திக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்யலாம்?&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-110493317385071799?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/110493317385071799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=110493317385071799' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110493317385071799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110493317385071799'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2005/01/blog-post_05.html' title='நான் வலைப்பதிவு ஆரம்பித்ததின் நோக்கம்'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-110483895434745659</id><published>2005-01-04T14:40:00.000+03:00</published><updated>2005-01-04T14:42:34.346+03:00</updated><title type='text'>வலைப்பதிவு பின்னூட்டங்களில் ஏன் இந்த அரசியல்?</title><content type='html'>சில காலம் முன்பு பத்து, பதினைந்து என்று அரிதாக இருந்த தமிழ் வலைப்பதிவுகள் (குறிப்பாக பத்ரி மற்றும் வெங்கட்) இன்று பல்கிப் பெருகி கிட்டத்தட்ட முந்நூறைத் தாண்டிவிட்டது. மக்களிடம் உள்ள எழுத்தார்வத்தைக் காண ஆர்வமாக இருக்கிறது. உலகில் எது நடந்தாலும் சிவனே என்று சுரணையற்றிருக்கும் சில தமிழர்கள் மத்தியில் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த வடிகாலாக இருக்க உதவும் வலைப்பதிவுகளை பல நபர்கள் பயன்படுத்த தொடங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் 'எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போறார்' என்று தொடங்கிய அத்துணை பேரும் தங்கள் வலைப்பதிவினை சரிவர தொடர்ந்து பராமரிக்கிறார்களா என்றால் இல்லை. ஆரம்பித்த ஜோரிலேயே கைவிட்டுவிட்டோரும் உண்டு. மற்ற வலைப்பதிவினரின் விஷயங்களைக் கொண்டு தங்களுடைய பதிவினை எழுதி ஒப்பேற்றி பஜனை செய்தோரும் உண்டு. ஏதோ எழுத வேண்டுமே என்று ஏதாவது ஒன்றை எழுதிவிட்டு பெருமூச்சு விடுவோரும் உண்டு. தாம் எழுதுவதை யாரும் கவனிக்காத பட்சத்தில் மனம் உடைந்து நிறுத்தி விடுவோரும் உண்டு. இதில் உருப்படியான விஷயங்களோடு எழுதுவோர் என்று அவதானித்துப் பார்த்தால் வரும் எண்ணிக்கை பத்து விரல்களுக்குள் அடங்கிவிடும் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நான் குறையாக சொல்லவில்லை. தினமும் எழுதுவதை ஒரு கடமையாகவே கொண்டால் நாளாக நாளாக இந்த எழுத்துப்பிசாசு நம்மிடம் மண்டியிட்டு அடங்கும். இதற்கு அடிப்படையான விஷயம் வாசிப்பு பழக்கம். வாசிக்க வாசிக்க எழுத்து நம்மிடம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவினை எழுதத் தொடங்கின விடயத்திற்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இத்துணை நாட்களாக,  பெரும்பான்மையான வலைப்பதிவுகளில் வரும் பின்னூட்டங்களை அவதானித்துப் பார்த்ததில் சில பேர், சில பேரின் பதிவுகளில் மட்டுமே தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்கின்றனர். இன்னும் ஆழப் பார்க்கும் போது, தங்களுக்கு ஒப்புதலான கருத்துக்கள்,  தங்களை குறிப்பிட்டு எழுதப்படும் வலைப்பதிவுகள்,  தங்களுடைய ஜால்ரா நண்பர்களின் வலைப்பதிவுகள்,  தாம் புகழப்பட்டு எழுதப்பட்டிருக்கும் பதிவுகள் ஆகியவற்றிற்கு மட்டுமே இவர்கள் தங்கள் கருத்துக்களை எதிரொலிக்கின்றனர். மற்றவர்களின் பதிவுகளை படித்தாலும்,  ஒருநாளும் தங்கள் கருத்துக்களை எழுதுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுருங்கக்கூறின் சில பேரின் பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டங்கள் கொடுக்கும் இவர்கள்,  பெரும்பான்மையான வலைப்பதிவுகளுக்கு, அவற்றை படித்திருந்தாலும்,  பின்னூட்டங்கள் கொடுப்பதில்லை. என்னைப் பொருத்தவரை யாரால் எழுதப்பட்டிருந்தாலும்,  அந்தப் பதிவு என்னைப் பதிவு என்னை பாதிக்கும் பட்சத்தில் என்னுடைய கருத்தை குறிப்பிட தவறுவதில்லை. யார் எழுதுவது என்றெல்லாம் பார்க்காமல் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று பார்ப்பதே என் பழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய மடற்குழுக்களிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. குழுக்களுக்குள்ளேயே உள்ள இந்த குழு மனப்பான்மையை எவ்வாறு விமர்சிப்பது என்றே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் உள்ள, தங்களை ஸ்தாபித்துக் கொண்ட எழுத்தாளர்களும் தங்கள் கருத்துக்களை எழுதி புதிதாக எழுதுபவர்களை ஊக்குவிப்பதில்லை. தங்களின் பின்னால் உள்ள ஒளிவட்டத்தின் சக்தி குறைந்துவிடும் என்று என்கிறார்களோ என்னவோ. இந்த விஷயத்தில் எழுத்தாளர் இரா.முருகனுடைய செயல்பாடுகளும் எனக்குத் திருப்திதருவதாக இல்லை. தன்னை, தன் எழுத்துக்களை  புகழந்து எழுதும் நபர்களின் கருத்துக்களுக்கு மட்டுமே அவர் காதுகொடுக்கிறார். மற்றவர்களின் கருத்துக்கள்,  அது எவ்வளவு சிறந்ததாக இருந்ததாலும் அவர் கண்டுகொள்வதாக இல்லை. பிரபலமானவராக இல்லாவிட்டாலும், சிறப்பாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் படைப்பாளிகளை பாராட்டிவிட்டால் தங்கள் தலையில் உள்ள கீரிடம் இறங்கிவிடும் என்று நினைக்கும் இம்மாதிரி மனிதர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை நினைத்தால்......&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வலைப்பதிவின் description-ஐ படிக்கவும்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-110483895434745659?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/110483895434745659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=110483895434745659' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110483895434745659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110483895434745659'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2005/01/blog-post_04.html' title='வலைப்பதிவு பின்னூட்டங்களில் ஏன் இந்த அரசியல்?'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-110482344241520530</id><published>2005-01-04T10:22:00.000+03:00</published><updated>2005-01-04T10:24:02.416+03:00</updated><title type='text'>Web Counter  என்பது ஒரு மாயையா?</title><content type='html'>கணினித் தொழில்நுட்பம் தெரிந்த நண்பர்கள் முன் இந்தக் கேள்வியை வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வலைப்பதிவை எத்துணை பேர் வந்து பார்வையிடுகிறார்கள் என்பதை அறிய இலவசமாக வழங்கப்படும் சேவையான web-counter தளத்திலிருந்து இலவச மென்பொருளை என் வலைப்பதிவில் பொருத்தினேன். அது என்னடாவென்றால் சென்னையில் ஆட்டோ மீட்டர்கள் சூடுவைத்து ஓட்டுகிறார்கள் என்று சொல்கிறார்களே அந்த மாதிரி ஓடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் refresh செய்யும் போதெல்லாம் சமர்த்தாக ஒரு நம்பரை கூட்டிக் கொள்ளும் அந்த மென்பொருள் பத்துநிமிடம் கழித்து வந்து பார்த்தால் குறைந்தது 30 முதல் 40 எண்களைக் கூட்டிக் கொள்கிறது. அந்த இடைவெளியில் அத்துணை பேர் வந்து என் வலைப்பதிவை பார்வையிட்டு சென்றிருப்பார்களா என்று ஐயமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுத்தான் ஆரம்பித்த என் வலைப்பதிவை (அரசியல்வாதிகள் மேடைகளில் எதிர்க்கட்சிக்காரர்களை திட்டி முழங்குகிற பாஷையில் சொன்னால்,  முந்தா நாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான) கிட்டத்தட்ட நானூறுக்கும் மேற்பட்டவர்கள் வந்து பார்த்திருப்பார்கள் என்று நம்ப என் மனம் மறுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'வேண்டுமானால் என் வலைப்பதிவிற்கு வா. பதில் சொல்கிறேன்' என்று மிரட்டாத,  தொழில்நுட்பம் அறிந்த நண்பர்கள் இதனை விளக்கித்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-110482344241520530?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/110482344241520530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=110482344241520530' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110482344241520530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110482344241520530'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2005/01/web-counter.html' title='Web Counter  என்பது ஒரு மாயையா?'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-110476653979304434</id><published>2005-01-03T18:33:00.000+03:00</published><updated>2005-01-03T18:35:39.793+03:00</updated><title type='text'>நண்பர்கள் பா.ராகவன் மற்றும் பத்ரி அவர்களின் கவனத்திற்கு</title><content type='html'>இருவரின் வலைப்பதிவுகளையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் பத்ரி பல தொழில்நுட்பங்களின் பரிணாம வளர்ச்சியையும் சில முக்கியதகவல்களையும் அவ்வப்போது தந்து பெரும்பங்காற்றிக் கொண்டிருக்கிறார். நம்பகமான தகவல்களைப் பெற அவர் வலைப்பதிவையே பார்ப்பது என் வழக்கம். சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை  அழிவில் சிக்கிய மக்களின் துயர்துடைக்க அவர் ஆற்றிய / ஆற்றிக் கொண்டிருக்கிற பங்கு முக்கியமானது. இணையத்தில் நான் மிகவும் மதிக்கிற மனிதர்களில் பத்ரியும் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறானவரைப் பற்றி,  ஜனவரி 2005 காலச்சுவடில் படித்த ஒரு விடயம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சிங்கையில் நடந்த கணினித் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி பற்றி ஒரு கருத்தரங்கு நடந்தது. அதைப்பற்றி மேற்சொன்ன இதழில் சிபிச் செல்வன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;யூனிகோடு பற்றின தலைப்பில் பத்ரியின தலைமையில் ஒருநாள் கருத்தரங்கு நடந்ததாகவும் ஆனால் அதில் பெறப்பட்ட தகவல்கள் திருப்திகரமாக இல்லாததாகவும் அவர் எழுதியுள்ளார். மேலும் ஒருவர் அங்கு எழுப்பின பல முக்கியமான கேள்விகளுக்கு நேரமில்லை என்று முடித்துக் கொண்டு பத்ரி எழுந்து விட்டதாகவும் அந்த கட்டுரையாளர் எழுதியுள்ளார். எழுத்துரு பிரச்சினையில் யூனிகோடு எவ்வாறு பெரும்பங்காற்றுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவ்வாறான கருத்தரங்கில் தகவல்களை சரிவர தராமல் பத்ரி வெளியேறினார் என்கிற செய்தி ஆச்சரியப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் பத்ரி இது குறித்து விளக்கம் தருவாரா?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சர்ச்சை பா.ராகவனைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே காலச்சுவடில் ஞாநி (தீம்தரிகிட பத்திரிகையின் ஆசிரியர்) சமீபத்தில் எழுந்துள்ள சங்கர மட விவகாரங்களைப்பற்றின ஒரு கட்டுரை எழுதியுள்ளார். சங்கர மடம் எவ்வாறு மீடியாவில் தமது பலமான ஆதிக்கத்தை பெற்றுள்ளது என்பதை விளக்கும் கட்டுரை அது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஒரு பகுதியில், நக்கீரன் பத்திரிகையில் ம.வே.சிவகுமார் என்கிறதொரு எழுத்தாளர் எழுதின கட்டுரை பற்றிய குறிப்பொன்றும் வருகிறது. 1987-ல் ஜெயேந்திரர் மடத்தை விட்டு வெளியேறின விவகாரத்தை வைத்து ம.வே.சிவகுமார் 1991-ல் ஒரு சிறுகதை எழுதினதாகவும், அது ஜெயேந்திரரின் கோபத்தைக் கிளறி மடத்தின் மூலமாக எதிர்ப்பும் மிரட்டலும் வந்ததாகவும், இது அனைத்தும் பா.ராகவன் என்கிற எழுத்தாளரின் மூலமாக நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரனில் வெளியான அந்த கட்டுரையை நான் படிக்கவில்லை என்றாலும் இந்த செய்தி எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பா.ராகவன் ஒரு வெகுஜன பத்திரிகையில் நீண்ட காலமாக எழுதிவரும் எழுத்தாளர் என்பதறிவேன். அவர் படைப்புகளைப் பற்றி எனக்கு பல்வேறுபட்ட மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்,  அவர் ஒரு இடைத்தரகராக செயல்பட்டிருப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காலச்சுவடில் பா.ராகவனைப் பற்றி செய்திவருவது இது முதன் முறையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;காலச்சுவடு  ஆகஸ்டு 2000 என்று ஞாபகம். குமுதம் இதழ் தொடர்ந்து காலச்சுவடை தாக்கி எழுதுவதை பற்றி அதன் ஆசிரியர் கண்ணன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் மூலகாரணமாக அவர் இவ்வாறு எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ராகவன் கண்ணனைச் சந்தித்து தனது சிறுகதைத் தொகுதியன்றை கையப்பமிட்டு தந்ததாகவும், அதைப்பற்றி காலச்சுவடில் மதிப்புரை ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் அந்த சமயத்தில் கல்கி பத்திரி¨கியில் வெளியாகிக் கொண்டிருந்த சுமி சூப்பர் மார்க்கெட் என்கிற பகுதியை தாம்தான் எழுதிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.&lt;br /&gt;ஆனால் அவரின் சிறுகதை தொகுதியைப் பற்றி காலச்சுவடு எழுத மறுத்துவிடவே காழ்ப்புணர்ச்சி கொண்டு கல்கியிலும் அதைத் தொடர்ந்து குழுதத்திலும் காலச்சுவட்டைப் பற்றின எதிர்மறையான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தார் என்றும் கண்ணன் குற்றஞ்சாட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் உங்களின் விளக்கத்தை தர முடியுமா,  பா.ராகவன்?&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மீது சாற்றப்பட்டிருக்கிற குற்றஞ்சாட்டுக்களை நீங்கள் விளக்கமளிப்பதின் மூலம் அந்தப் பழியிலிருந்து நீங்கள் விலகியிருக்கலாம் என்கிற நல்லெண்ணத்திலேயே இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். ஏனெனில் மேற்குறிப்பிடப் பட்டிருக்கிற காலச்சுவடில் வந்திருக்கிற செய்தியைப்படித்துவிட்டு உங்கள் மீது நல்லெண்ணம் வைத்திருக்கிற நண்பர்கள் அதனால் சிறிது சலனப்படலாமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப் பற்றின நல்லதொரு குறிப்பையும் மற்றொரு இதழில் படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலகுமாரன் தம் நாவல்களை ஆனந்த நாவல் என்றொரு பத்திரிகை குழுமத்தின் மூலமாக எழுதி வெளியிட்டு வருகிறார். அதில் அவரின் கேள்வி - பதில்களும் இடம்பெறம். அவ்வாறு சமீபத்தில் வெளிவந்திருக்கிற நாவலில், சமீபத்தில் வெளியான சிறந்த புத்தகமாக ஒரு வாசகர் கேட்டிருக்கும் கேள்விக்கு,  நீங்கள் பிரசுரித்திருக்கிற டாலர் தேசம் மற்றும் 9/11 கட்டுரைத்தொகுதிகளை மிகவும் புகழ்ந்திருக்கிறார். வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது என்றும் சிபாரிசு செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-110476653979304434?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/110476653979304434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=110476653979304434' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110476653979304434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110476653979304434'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2005/01/blog-post_110476653979304434.html' title='நண்பர்கள் பா.ராகவன் மற்றும் பத்ரி அவர்களின் கவனத்திற்கு'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-110476434298851631</id><published>2005-01-03T17:57:00.000+03:00</published><updated>2005-01-03T17:59:02.986+03:00</updated><title type='text'>வலைப்பதிவர்களே, ஏன் இந்த பாசாங்கு?</title><content type='html'>சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளினால் மிகுந்த பொருட்சேதங்களும்,  உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. பெரும் துயரம்தான். மனிதநேயம் மக்களிடம் இன்னும் பட்டுப்போகவில்லை என்பதை காண்பிப்பதற்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகளும்,  நிறுவனங்களும்,  தனிமனிதர்களும் தங்களாலான உதவிகளை செய்து அந்த மக்களின் துயர்துடைக்க பாடுபட்டு வருகின்றனர். சுனாமியை கண்டறியும் சர்வதேச அமைப்பில் இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகள் உறுப்பினராக இருந்திருந்தால் இந்த பேரழிவை பெரிதும் தடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் நாமறிந்த பழைய செய்திதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த பேரழிவு ஏற்பட்ட பின்னால் நம் வலைப்பதிவாளர்களில் சிலர் நடந்து கொண்ட முறை அருவருப்பை தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வைரமுத்து இந்த சுனாமியின் பாதிப்பால் ஒரு கவிதை எழுதிவிட்டாராம். உடனே அவரை 'நாய்' என்று வர்ணிக்க ஒரு கூட்டம் புறப்பட்டுவிட்டது. தெரியாமல்தான் கேட்கிறேன். உங்கள் வேதனைகளையெல்லாம் நீங்கள் உங்களுக்குத் தெரிந்த உரைநடை மொழியில் எழுதி உங்கள் ஆற்றாமையையும் துக்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். பாராட்டுக்குரிய விஷயம். அதே போல் ஒரு கவிஞனும் தம்முடைய மொழியில்,  தமக்கு மிகவும் பரிச்சயமான மொழியில் அதை வெளிப்படுத்தியதில் என்ன தவறு?. கருணாநிதியும் இவர்களின் கண்டனங்களிலிருந்து தப்பவில்லை. ஒரு ஓவியன் இந்த பேரழிவை ஒரு ஓவியமாக வரைந்தால் அதையும் கண்டிப்பீர்களா? பிரபலங்கள் எதைச் செய்தாலும் அவர்களை திட்டித்தீர்த்து அதன்மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் அற்பமான வழியை நாமும் பின்பற்ற வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் இவ்வாறு குற்றஞ்சாட்டுகின்றனர்.  தொலைக்காட்சிகளில் தம்முடைய தொடர்களையும்,  கும்மாங்குத்து பாடல்களையும் ஒரு நாகரிக அடிப்படையில் நிறுத்தித் தொலைக்காமல் ஒளிபரப்பிக் கொண்டே இருந்தார்கள் என்று. நியாயமான கேள்விதான். ஆனால் இந்த தொலைக்காட்சிகள் இல்லாமலிருந்தால் நம்மால் இந்த பேரழிவின் மூலம் இறந்த செய்தியை உடனுக்குடன் தெரிந்து கொண்டிருக்க முடியுமா? ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாவது எத்துணையோ நாட்களுக்கு முன்னாலேயே தீர்மானிக்கப்படுகிறது. திடீரென்று அதை நிறுத்துவதால் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவேதான் அவர்கள் இதை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுசரி. நம்மில் எத்துணை பேர், இந்த பேரழிவினால் ஏற்பட்ட துக்கத்தின் காரணமாக சாப்பிடாமலும்,  சிரிக்காமலும், எல்லா வியாபாரத்தையும் மூடிவிட்டு மூலையில் துயரத்துடன் உட்கார்ந்து கொண்டோம். பாசாங்கின்றி பதிலளித்தால் நாம் இவ்வாறு செய்யவில்லை. இந்த அழிவிற்காக மனதார வருத்தப்பட்டோம். அதற்காக நம்மாலாளான உதவிகளை செய்தோம். அவ்வளவுதான். பிறகு நம்முடைய வேலைகளை பார்க்கப் போய்விட்டோம். ஆனால் மற்றவர்கள் மட்டும் கொஞ்சங்கூட சிரிக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். மேலும் அந்த இந்த துக்ககரமான சூழ்நிலையில் நீங்கள் ஏன் அந்த டப்பாங்குத்து பாடல்களை ஒளிபரப்பும் சானல்களை தேர்ந்தெடுத்து பார்க்கிறீர்கள்? உங்களாலேயே அதை தவிர்க்கவியலாத போது அவர்களை குறைகூறி பயனில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சில செய்திக் காட்சி நிறுவனங்கள் இதை தொடர்ந்து ஒளிபரப்பியது என்றால் இன்றைய சூழ்நிலையில் இதுதான் சூடான செய்தி. இதைப் பற்றி கூறினால்தான் மக்கள் தொடர்ந்து அந்த சானலில் தங்குவார்கள். எந்த தொலைக்காட்சி விளம்பர இடைவேளை இல்லாமல் இந்த செய்திகளை ஒளிபரப்பியது? கூறுங்கள் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குள் ஏன் இந்த பாசாங்கு நண்பர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-110476434298851631?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/110476434298851631/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=110476434298851631' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110476434298851631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110476434298851631'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2005/01/blog-post_03.html' title='வலைப்பதிவர்களே, ஏன் இந்த பாசாங்கு?'/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9920794.post-110476226502396599</id><published>2005-01-03T17:23:00.000+03:00</published><updated>2005-01-03T17:25:07.206+03:00</updated><title type='text'>இணையத் தோழர்களுக்கு வணக்கம், </title><content type='html'>இணையம் சமீப காலமாக ஜகமெங்கும் உள்ள பல தமிழரை ஒன்றிணைத்திருக்கிறது. தம் படைப்புகள் அச்சு ஊடகத்தில்தான் இடம் பெற வேண்டுமென்கிற நிலைமாறி செலுத்திய அம்பு போல் உடனே மற்றவர்கள் பார்வைக்கு தம் படைப்புகளை விருந்தாக்க முடிகிறது. இவ்வளவு அரிய தொழில்நுட்பத்தை நாம் பெரும்பாலும் ஆக்கப்பார்வையில் மட்டும் பயன்படுத்திக் கொள்கிறோமா என்றால் இல்லை. நம்மிடையே உள்ள பொறாமை பொச்சரிப்புக்களையும், பூசல்களையும், தனிமனித குரோதங்களையும், பகைமை பாராட்டவும் சில சமயங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மட்டுமே இணையம் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த அரிய தொழில்நுட்பத்தை நம்முடைய விகாரங்களை வெளிப்படுத்த பயன்படுத்தக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் உங்களுடன் இத்துணை நாட்களாக இணையத்தில் பயணக்கிறவன்தான். சில வலைப்பதிவுகளையும், பின்னூட்டங்களையும் சமயங்களில் எரிச்சலுடனும், அருவருப்புடனும் கவனித்துக்கொண்டிருக்கிறேன். பல சமயங்களில் என்னுடைய கருத்துக்கு ஒத்துப் போகாத பதிவுகளையும் கவனிப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இம்மாதிரியான அருவருப்பான பதிவுகளை கண்டிக்கவும் மாற்றுக் கருத்துக்களை நாகரிகமான மொழியில் எடுத்துரைக்கவும் இந்த வலைப்பதிவினை தொடங்கியுள்ளேன். அதற்காக அக்கினிக்குஞ்சு என்கிற முகமூடிப் பெயரை தேர்ந்தெடுத்துள்ளேன். ஏன் நேரடியாக எழுதலாமே என்கிற கேள்வி எழலாம். சில சமயம் நட்பு வட்டத்தையும் தாண்டி நம் கருத்தை காட்டமாக தெரிவிக்க முடியாமற் போகிறது. நட்பு வேறு, கருத்து மோதல்கள் வேறு என்கிற பக்குவம் இன்னும் நிறைய பேரிடம் வரவில்லை. எனவேதான் இந்த முகமூடிப் பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பதிவில் கண்டிப்பாக எந்த ஆபாச மொழியும் இருக்காது. சக வலைப்பதிவர்களுனுடனான மாற்றுக்கருத்துக்களை விமர்சன மொழியில் எடுத்துரைப்பது மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;நான் யார் என்று ஆராயமல், என்ன சொல்கிறேன் என்பதை மட்டும் கவனிக்குமாறு நண்பர்களை வேண்டிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9920794-110476226502396599?l=akkinikunchu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akkinikunchu.blogspot.com/feeds/110476226502396599/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9920794&amp;postID=110476226502396599' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110476226502396599'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9920794/posts/default/110476226502396599'/><link rel='alternate' type='text/html' href='http://akkinikunchu.blogspot.com/2005/01/blog-post.html' title='இணையத் தோழர்களுக்கு வணக்கம், '/><author><name>அக்கினிக்குஞ்சு</name><uri>http://www.blogger.com/profile/07745815414004740414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img.photobucket.com/albums/v621/suresh/fire.jpg'/></author><thr:total>1</thr:total></entry></feed>
